Sunday, July 26, 2009

அன்பு வணக்கங்கள்


தமிழ் பதிவுலக எழுத்தாளர்கள் அனைவருக்கும் எமது அன்பு வணக்கங்கள்,
சுயமாக பல தகவல்களை பதிவிடுவதில் இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் எழுத்தாற்றல்கள், அவர்களின் எழுத்துக்கள் மூலம் மற்றவர்கள் அடையும் நன்மைகள், தகவல்களை மற்றவர்களுடன் பரிமாறுதல் போன்ற சிறந்த விடயங்கள் வலையுலகில் இடம்பெற்றுவருகின்றது.
அத்தோடு பல எழுத்தாளர்கள், சிந்தனாவாதிகள் இணைந்து ஒரு நண்பர்குழுவாக தமது கருத்துக்களை பகிரவும் பதிவுலகம் அவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குகின்றது.

இந்த நிலையில் இவ்வாறு எந்தவித இலாபகரமான நோக்கமும் இன்றி, தனது கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் வழிகாட்டும் ஒரு வலைப்பதிவு எழுத்தாளனுக்கு உரிய கௌரவத்தை கொடுப்பதற்காகவே நாம் சில, கவிஞர்கள். எழுத்தாளர்கள், பேராசிரியர்களை கொண்டு இந்த வலையமைப்பினை அமைத்துள்ளோம்.
ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் உயரிய கௌரவம் அவனை ஒரு அமைப்போ, இல்லது அவன் திறமைகளை ஆராய்ந்த ஒரு குழுவோ பாராட்டும் போதுதான் கிடைக்கும் என்பதை நாம் அறிந்துள்ளோம்.
அந்த வகையில் இன்றைய இளைஞர்களின் பதிவுகளின் தரத்தை உயர்த்தும் நோக்குடனே நாம் இந்த வலைப்பதிவர்களுக்கான “நட்சத்திர விருதை” சிறந்த வலைப்பதிவாளர்களுக்கு வழங்கவுள்ளோம்.
அதற்கு வலைப்பதிவுலகம் எமக்கு உதவிகளை நல்கும் என எதிர்பார்க்கின்றோம்.

நன்றி.
ப.அன்பரசு M.A

விருதுகளுக்கான தெரிவுகளும், தெரிவு செய்யப்படும் முறையும்.


எமது இந்த திட்டமானது எந்தவித இலாபநோக்கமும் அற்றதோடு. பதிவுலக எழுத்தாளர்களை கொளரவப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
இந்த வகையில் எமக்கு சிபாரிசு செய்யப்படும் வலைப்பதிவு எழுத்தாளர்களின், பதிவுகள் எமது தெரிவுக்குழுவினரால் அராயாப்படும்.
வெறுமனே ஜனரஞ்சகமான தகவல்களை மட்டும் இன்றி, மற்றவர்களுக்கு பிரயோசனமான தகவல்களை பல்வேறு துறைகளிலும் இருந்து பதிவிலிடும் பதிவர்களுக்கே இங்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு குழுவில்
திரு.உ.பழனிச்சாமி (முன்னாள் கல்லூரி முனைவர்)
திரு.சோ.கண்ணதாசன் (சட்டவாளர், எழுத்தாளர்)
திரு.அ.புருசோத்தமன் (தமிழ் விரிவுரையாளர்)
திருமதி.சா.கோவிந்தன் (அரச பணியாளர், எழுத்தாளர்)
கவிஞர். எதுகைமோனையான்
ஆகியோர் உள்ளனர். இவர்களே சிபாரிசு செய்யப்படும் தளங்களை ஆராய்ந்து சிறந்ததாக கருதப்படும் எழுத்தாளர்களின் வலைப்பதிவுகளுக்கு நட்சத்திரப்பதிவாளர் என்ற கௌரவம் கிடைக்க வகை செய்வர்.

இந்த நட்சத்திர பதிவாளர் என்ற விருது, ஜூலை மாதம் தொடக்கம் ஒவ்வொரு மாதமும் ஒருவர் வீதம் வழங்கப்படவுள்ளது என்பதுடன் இந்த விருது வழங்கப்படும் நபருக்கு ரூபா 1000 பரிசும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தெரிவு செய்யப்படும் பதிவரின், அவருக்கு அவருடைய பதிவுகளில் சிறந்த ஒரு எனக்கருதும் பதிவு எமது தளத்தில் இடப்படுவதுடன், அவர் பற்றிய தகவலும் எம் வலைப்பதிவில் இடப்படும்.

வலைப்பதிவர்களே…இந்த ஜூலை மாதத்திற்கான நட்டத்திரப்பதிவாளர் நீங்களாகவும் இருக்கலாம் எனவே உங்களைப்பற்றியோ, அல்லது உங்கள் நண்பர்களின் தளங்களைப்பற்றியோ உங்கள் சிபாரசுகளை
starblogwriter@gmail.com என்ற எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்.